×

கார்த்திகை 2வது சோமவார மண்டகப்படி திருவிழா செண்பகவல்லியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

கோவில்பட்டி, நவ. 28: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் யோகீஸ்வரர் உறவின்முறைச் சங்கம் சார்பில் கார்த்திகை 2வது சோமவார மண்டகப்படி திருவிழா நடந்தது. யோகீஸ்வரர் உறவின்முறை சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.யோகீஸ்வரர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவில் செயலாளர் வெயிலுமுத்து, பொருளாளர் முப்பிடாதி, துணைத் தலைவர்கள் எஸ்.செல்லத்துரை, மூக்கையா, துணைச் செயலாளர்கள் கே.செல்லத்துரை, கருப்பசாமி உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post கார்த்திகை 2வது சோமவார மண்டகப்படி திருவிழா செண்பகவல்லியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Karthikai 2nd Somavar Mandakapadi Festival Devotees ,Senpagavalliyamman Temple ,Kovilpatti ,Senpagavalliyamman ,Udanurai Bhuvananatha Swamy Temple ,Karthikai ,Yogeeswarar Relational Society ,Kartikai 2nd Somavar Mandakapadi Festival Devotees Procession of Milk Pot ,
× RELATED தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை